செவ்வாய், 27 ஜூலை, 2010

உலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்

உலகில் இன்று பரந்துபட்டு வாழும் இரண்டு பழம் பேரினங்களில் தமிழினமும் ஒன்று. மற்றொன்று சீன இனம். உலகில் இன்று வாழும் தமிழ் மக்களின் மொத்த மதிப்பீடு ஏறத்தாழ பதினேழு கோடியாகும். சீன நாட்டில்சீ-மோ-லா”(TCHI-MO-LO) என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ நாலரைக் கோடியாகும் என்றும் பிரன்னீசு மலை நாடு, செருமனி, பிரான்சு, போர்த்துகல், இத்தாலி ஆகிய நாடுகளில்தாமோர்மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ மூன்றரைக் கோடி பேராகும் என்றும், எகிப்தில் தொமூர் என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ இரண்டரைக் கோடிப்பேர் என்றும் அறிஞர்கள் கூறுவர். சீ-மோ-லா, தாமோர், தொமூர் என்னும் பீயர்கள் தமிழ் என்னும் திரிபு மொழிகளாகும்.


தமிழ் என்னும் சொல் எங்ஙனம் வேத ஆரியர்களிடையே த்ரமுள் என்று திரிக்கப் பெற்று த்தரமிளம், திரவிடம் என உருமாறி வழங்கியதோ, அங்ஙனமே அச்சொல் பல்வேறு நாடுகளில் பலவேறு வடிவங்களாகத் திரிபுற்றும், கலப்புற்றும், சிதைவுற்றும் மாறியும் வழங்குகின்றது. கிரேத்தா தீவில் தெர்மிலர் என்னும் தீபெத்தில் திரமிலர் என்றும் தமிழர் அழைக்கப்பெறுகின்றனர். மற்றும் தமிழ் மொழியும் தாமிட , தமுர், தாமாலி, தமார், தமிர், துமா, தொமிட, தெமலிக், தாமுரி, தாமல் முதலிய பெயர்களாகப் பல்வேறு நாடுகளில் வழங்கப்பெறுகின்றன.


மலேசியா, ஈழம், சிங்கப்பூர், அந்தமான், பர்மா, பிசி, பிரான்சு, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நகர்ப்புறங்களில் கலப்பில்லாமல் இங்கிருந்து பலவகைப் பணிகள் தொடர்பாகப் போய் வாழும் தமிழின மக்கள்தாம் தம்மைத் தமிழர்கள் என்றும், தாம் பேசும் தாய்மொழியைத் தமிழ் என்றும் சிதைவில்லாமல் கூறி வருகின்றனர். தமிழீழமாகிய யாழ்பாணத்தில் வாழும் தமிழினமும் தமிழும் பெயரிலும் வழக்கிலும் திரிபில்லாமல் இருப்பதற்குக் கரணியம், அங்குத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதுதான். மற்றபடி ஆத்திரேலியா, இந்தோனேசியா, மொரிசீயசு முதலிய நாடுகளில் கூட தமிழினப் பெயரும் தமிழ் மொழிப் பெயரும் ஓரளவு சிதைந்தும் பெருவாரியாக வழக்கிழந்தும் போய்விட்டன. உலகில் தமிழினம் வாழும் வேறு நாடுகள் திபெத்து, பெலுச்சித்தானாம், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கானா, கம்போடியா, சயாம், மார்த்தினிக்கு, மோரித்டீவு, பிரிட்டிசு, குவைத்து, தென் அமெரிக்கா , சப்பான், உகாண்டா முதலியன.


உலகின் ஏறத்தாழ நாற்பத்து நான்கு நாடுகளில் தமிழினம் வாழ்கிறது. அங்கெல்லாம் தமிழ்மொழி கலப்புற்றும், சிதைந்தும், திரிந்தும் வழங்கப்பெறுகின்றது. சில நாடுகளில் தமிழினம் பழங்குடி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். சிலவிடங்களில் திருந்திய மக்களாக நாகரீகமுற்ற மக்களாக, ஆனால் பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகள் பேசும் மக்களாக வாழ்கின்றனர். உருசிய நாட்டில் ஏறத்தாழ முப்பது இலக்கம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பெற்றுள்ளது. அவர்கள் சி-மோ-லா என்னும் திரிந்த மொழியைப் பேசி வருகின்றனர் என்னும் கூறப்பெறுகிறது.


  • தென்மொழி பெருஞ்சித்திரனார்

வியாழன், 15 ஜூலை, 2010

உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு























“ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர்
ஞாலத்
திருளகற்றும்- ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று)
ஏனையது
தன்னே ரிலாத தமிழ் !”

என்று, தனக்கு நிகரில்லாத மொழி தமிழ் எனக் கூறுவர். அத்தகு சிறப்பு வாய்ந்த உலகத் தன்னேரில்லா இனிய மொழி நமது தாய்மொழி என எண்ணுங்கால் உள்ளம் உவகை கொள்கிறது. அத்தகு சிறப்புக்குரிய செம்மொழி மாநாட்டில் கலந்துக் கொள்கின்ற வாய்ப்பினைப் பெற்ற யான் பெருதற்கரிய பேறாக கருதுகின்றேன். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டதன் அடிப்படையில் மாநாடு தொடர்பான எனது பகிர்வுகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் பேருவகை அடைகின்றேன்.

உலகத் தொன்முது இனமான தமிழர் நாகரிகம் உலக நாகரீகங்களுக்கெல்லாம் முன்னோடி. தமிழரின் வரலாறு மறைந்த குமரிக்கண்டத்திலிருந்து தொடங்குவதாக ஆய்வியலறிஞர்கள் கூறுகின்றனர்.இக்கருத்தினையே 1966 இல் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் “The Primary classical language of the world” என்ற நூலின் வழி தனது ஆய்வின் முடிந்த முடிபாக செம்மொழியான தமிழே உலக மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி ஆகும் தகுதியுடையது என சான்றுகள் வழி தமிழ்க்கூறு நல்லுலகிற்கு உணர்த்தியிருக்கின்றார்..



செருமன் நாட்டு பேராசிரியை

உலகில் ஏறத்தாழ 3000-த்திற்கும் அதிகமான மொழிகள் பேச்சுவழக்கில் உள்ளன என்று அறிஞர் பெருமக்கள் கூறுவர். இவற்றில் அந்தந்த மொழிகளுக்கென தனி எழுத்து பெற்றவை ஏறக்குறைய 300 அளவில் இருக்கலாம். அவற்றுள் செம்மொழி எனும் தகுதிக்குரிய மொழிகள் மிகச் சிலவே.மெசபடோமியா நாகரீகமும் எஸாமியர் ஏற்றமும் குமரிக்கண்டத் தமிழரின் வரலாற்று சுவடுகள் இப்படி நமது தாய்மொழியான தமிழ் மிக நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்பினை கொண்டிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனையே எல்லீசு, கால்டுவெல், போப், வின்சுலோ, ஆல்பர்ட் சுவைட்சர், ஜான் மார், அஸ்கோ பர்போலா, கமில் சுவலபில் போன்ற அயல் நாட்டு பெருமக்கள் உலகுக்கு உணர்த்தியிருக்கின்றனர். இத்தகு சிறப்பினைக் கொண்ட மொழி செம்மொழி தகுதிப் பெற்றிருப்பது உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் போற்றிப் புறந்து கொள்ள வேண்டிய தகவலாகும். இவ்வரலாற்றுச் சிறப்புக்குரிய செம்மொழி மாநாட்டில் மலேசியக் கல்வி அமைச்சின் சார்பாக யான் கலந்து கொண்டேன்.





திருத்தமிழ் நற்குணருடன் யான் கண்காட்சி அரங்கில்

எங்கு பார்க்கினும் மக்கள் கூட்டம் அலை மோதியது. கோவை மாநகரம் கொஞ்சும் தமிழால் விழாக்கோலம் பூண்டிருந்தது. சாலையோரங்களின் இரு மருங்கிலும் கண்ணைக் கவரும் வகையில் பதாகைகளும் தமிழரின் தனிச்சிறப்பினையும் மான்பினையும் எடுத்தியம்பும் ஓவியங்களும் தமிழர் உள்ளங்களைக் குளிர வைத்துக் கொண்டிருந்தன. தமிழன் ஏதிலி இனம் அல்ல. உலகப் புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் உறவுக்காரன் என்பதை கொடிசியா வளாகத்தில் நிரம்பியிருந்த மக்கள் கூட்டம் உணர்த்தியிருந்தது.

ஒண்டமிழ்த்தாய்ச் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம் தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே

என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகள் உயிர்ப்பெற்றிருந்தன. தமிழ், தமிழ் இனம், தமிழ் இலக்கியம், தமிழர் நாகரீகம், பண்பாடு, இணையம் என எல்லாத் துறைகளிலும் தமிழ் மொழி அடைந்துள்ள வெற்றிகளை உலகுக்கு பறைசாற்றிட ஆய்வறிஞர்களும் மொழியறிஞர்களும் முகாமிட்டிருந்தனர். அன்னை தமிழுக்கு தனது இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்ற மொழி மூலவர்களின் பெயர்களை ஆய்வரங்குகளுக்குச் சூட்டிப் பெருமை சேர்த்திருந்தனர் ஏற்பாட்டுக் குழுவினர். முகப்பரங்கம், கலந்தாய்வரங்கம், பொழிவரங்கம், கலந்துரையரங்கம், கண்காட்சி அரங்கம், இணைய கண்காட்சி அரங்கம், இனியவை நாற்பது என மாநாட்டின் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் உலக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கவேண்டியவையாகும். தாய்தமிழுக்காக இத்தகு மிகச்சிறப்பான ஏற்பாடுகளை முன்னின்று மேற்கொண்டிருக்கின்ற முத்தமிழ் மூதறிஞர் காலத்தால் நிலைபெறுவார் என்பது திண்ணம்.


இவ்வரலாற்றுச் சிறப்புக்குரிய விழாவில் 50 நாடுகளிலிருந்து ஆய்வாளர்களும் பேராளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். பல இலக்கம் மக்கள் திரளாக கலந்துக் கொண்டு அன்னை தமிழுக்குப் பெருமை சேர்த்தனர். ஆய்வரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம், பொழிவரங்கம் என ஒவ்வொரு நிகழ்வும் தமிழ்மொழியின் சிறப்பினையும் வரலாற்று உண்மையினையும் எடுத்தியம்புவதாக அமைந்திருந்தன. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என முழங்கிய செம்மொழி வாழ்த்துப்பா மாநாட்டு வளாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன் தமிழரின் நாடி நரம்புகளில் ஊடேறிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.


கிரேக்கம், இலத்தீன், இப்ரூ, அரபு, சீனம், தமிழ் ஆகிய மொழிகள் உலகப்பெருமொழிகளாக மதிக்கப்படுகின்றன. ஆயினும் அவற்றுள் தமிழ் தனிப்பெருஞ்சிறப்புடையது என்பதனை ஆய்வரங்குகளின் வழி உலகுக்கு உணர்த்திய அறிஞர் பெருமக்கள் போற்றுதலுக்குரியவர்கள். ஒட்டுமொத்தத்தில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்ததோடல்லாமல் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாக அமைந்தது என்றால் மிகையாகா.



வாழ்க தமிழ் வெல்க தமிழினம்

தொடரும்...

வியாழன், 22 ஏப்ரல், 2010

பூஜ்ஜியமா ? சுழியமா?

எதிர்வரும் இல் தொடங்கி அறிவியல் கணிதப் பாடங்கள் மீண்டும் தாய்மொழியிலேயே கற்பிக்கப் படவிருக்கின்றன. இந்த அரிய வாய்ப்பினை மலேசிய அரசு மீண்டும் வழங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். ஆனால், தமிழ்மொழிக் காக்க வேண்டிய அரசு அதிகாரிகள் அப்பொறுப்பில் இருந்து கொண்டு மொழிக்கு இரண்டகம் செய்யும் போக்கு ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களால் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.

சுழியமா ? பூஜ்ஜியமா ? என்ற சிக்கல் தொடர்பான தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையிலும் சுழியத்தை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அறிவான விளக்கங்களை வழங்கவும் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

சுழியம் நல்ல தமிழ்ச் சொல்லாகும். எனவே, தமிழைக் காக்க வேண்டிய அவசியம் கருதி இச்சொல்லை நாம் தமிழ்ப்பாட நூலில் இடம்பெறச் செய்தல் வேண்டும்.


சுழியம் அன்றாட வாழ்வில் மக்கள் பயன் படுத்தும் வழக்குச் சொல்லாகும். இன்று மாணவர்களும் பெரியோர்களும் பரவலாக இச்சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே இதனைப் பயன்படுத்துவதில் தாழ்வில்லை.


பிறந்த குழந்தையின் தலையைப் பார்த்து ஒற்றைச் சுழி, இரட்டைச்சுழி என்பது சாதாரண மக்கள் பேசுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. ஆக பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றை ஒதுக்குவது ஏன்?


தமிழில்சுழிஎழுத்துகள் நிரம்ப உள்ளன. .கா : இரண்டு சுழின்மூன்று சுழிஎன அழைக்கின்றோம்.


சுற்றி அடிக்கும் காற்றைச்சுழல் காற்றுஎன்று குறிப்பிடுகின்றோம்.


மேலே சொன்ன அனைத்துச் சூழலிலும்சுழிஎன்பது வளைவுக் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

சுழி என்பதோடுஅம்விகுதி சேர்ந்துசுழியம்என்ற சொல் உண்டானது.


0 என்ற எண்ணைக் குறிக்கும் சரியான தமிழ்ச்சொல்தான் சுழியம். இச்சொல் மிக எளிமையாக மாணவர்களுக்குப் புரியும். ஆகவே இது மாணவர்களுக்கு புரியாது விளங்காது என்பது அறிவீனம்.


ஒரு புள்ளியில் தொடங்கி சுழித்து வந்து அதே புள்ளியில் ‘0’ என்பதற்குச் சுழியம் மிகப் பொருத்தமான தமிழ்ச்சொல்லாகும். ஆகவே, நமது தாய்மொழியாம் தமிழை நாம் பயன்படுத்துவதிலும் காப்பதிலும் என்ன தவறு ?


நன்றி:- தமிழ் நேசன்