

ஊசல் என்னும் ஊசலாட்டம் இன்று ஊஞ்சல் எனப்படுகின்றது. மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும். இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க இலக்கியங்களில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. நற்றினை எனும் நூலில்
“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்”
என்ற வரிகள் வெளிப்படுகின்ற “மடவோர்க்கியற்றிய மாமணி யூசல்” என்று சொல்லப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஊஞ்சல் விளையாட்டு இன்று குறைந்து விட்டது. ஆனால், மேற்கு நாடுகளில் பொதுப்பூங்காதோறும் ஊஞ்சல்கள் அமைத்து ஊஞ்சலாடுவது இன்று வழக்கமாகிவிட்டது.
நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்
3 கருத்துகள்:
நல்ல தகவல் பழந்தமிழரின் 36 வகை விளையாடல்களை
http://gunathamizh.blogspot.com/2009/06/36.html
இந்த முகவரயில் காணலாம் நண்பரே........
வெறியாட்டு பற்றி தாங்கள் ஒரு இடுகை எழுதியிருந்தீர்களே....
வெறியாட்டு பற்றிய இவ்விடுகை தங்கள் பார்வைக்காக...
http://gunathamizh.blogspot.com/2009/06/blog-post_11.html
வணக்கம் வாழ்க
தங்கள் பயனான தகவலுக்கு நன்றியன்.
கருத்துரையிடுக