![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZALc0c3SC5gwAd-9-uMRgmnLBLDJtQTAkGJwN3vSNWUI-5ikkpAx-SSTpVHJDOXUCZWgdFC03hCSJrd5_-9FoTP2WTe6TL0MJR82C4I5AMuK_yqMP7g3D4WkeWuqRlAPsxC70XZPZxmo/s400/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0.jpg)
இவற்றுக்கிடையில், உலகத்தமிழர்கள் இனி அடுத்தக் கட்ட போராட்டத்திற்குத் தயாராகுதல் வேண்டும். உலக தமிழின வரலாற்றில் என்று அழியாத புகழைச் சேர்த்திருப்பவர் மாவீரர் பிரபாகரன் அவர்கள். தமிழீழம் மலராமல் தலைவர் அவர்கள் ஒருபோதும் மரணத்தை சந்தித்திக்கமாட்டார் என்பது மட்டும் உறுதி. நம்புங்கள் நமது தலைவர் மரணத்தை வென்று மக்கள் மனங்களில் நிற்பவர்.
உலகத் தமிழின விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்துப் போராடிக்கொண்டிருக்கின்ற இனியும் போராடும் உண்மைத் தமிழ் வேங்கைக்கு மரணமேது. மாறாக ஒவ்வொரு தமிழின் உள்ளத்திலும் உணர்விலும் நிச்சயம் வீறு கொண்டு எழுவார். வெகு விரைவில் நமது வீர வேங்கைகள் தமிழீழத்தை வென்றெடுப்பர். அதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் நம்முடைய ஆதரவினையும் கடமையையும் நிச்சயம் செய்திடல் வேண்டும். இது வெறுமனே நடக்கின்ற போராட்டமல்ல , மாறாக ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் உண்மைப் போராட்டம். உலக வரலாற்றில் 49 நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வரலாறு உலகறிந்த உண்மை. ஆனால், இன்று ஒரு பிடி மண் கூடத் தமிழனுக்குச் சொந்தமில்லை என்று நினைக்கும் பொழுது நெஞ்சு பதைக்கிறது. உள்ளம் வெம்முகிறது.
உலகத் தமிழின விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்துப் போராடிக்கொண்டிருக்கின்ற இனியும் போராடும் உண்மைத் தமிழ் வேங்கைக்கு மரணமேது. மாறாக ஒவ்வொரு தமிழின் உள்ளத்திலும் உணர்விலும் நிச்சயம் வீறு கொண்டு எழுவார். வெகு விரைவில் நமது வீர வேங்கைகள் தமிழீழத்தை வென்றெடுப்பர். அதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் நம்முடைய ஆதரவினையும் கடமையையும் நிச்சயம் செய்திடல் வேண்டும். இது வெறுமனே நடக்கின்ற போராட்டமல்ல , மாறாக ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் உண்மைப் போராட்டம். உலக வரலாற்றில் 49 நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வரலாறு உலகறிந்த உண்மை. ஆனால், இன்று ஒரு பிடி மண் கூடத் தமிழனுக்குச் சொந்தமில்லை என்று நினைக்கும் பொழுது நெஞ்சு பதைக்கிறது. உள்ளம் வெம்முகிறது.
நமது தொப்புள் கொடி உறவுகளைக் கொன்றொழிக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்குத் துணைபோகும் இந்திய நாட்டுக்கும் உலக வல்லரசு நாடுகளுக்கும் சரியான பாடம் புகட்டிடல் வேண்டும். அதற்கு முகாமையாக நாம் நம்மை இந்திய மேலாதிக்கச் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ளல் வேண்டும். ஆகவே, தமிழர்களாகிய நாம் இனியும் நம்மை மறந்தும் இந்தியன் என்று அழைத்திடல் கூடாது. அதுவே நாம் இதுவரையில் தமிழீழ விடுதலைச் சமரில் வீரச்சாவடைந்திருக்கின்ற வீர வேங்கைகளுக்குச் செய்கின்ற உண்மை வணக்கமாகும். இதுவரையில் சாதிகளாலும் மதங்களாலும் இன்னபிற தாக்குரவுகளாலும் சிக்குண்டு சின்னாப்பின்னமாகி இருக்கின்ற நாம் இனி தமிழர், தமிழினம் என்ற சிந்தனைக்குள் வருதல் வேண்டும். அதுவே நமது அடுத்தக்கட்டப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் ஆயுதமாகத் திகழும். அடுத்தவனுக்காகச் சிந்தித்த்து போதும். இனி நம்முடைய சிந்தனையும் குறிக்கோளும் ஒன்றாக வேண்டும். தமிழா ஒன்றுபடு, தமிழால் ஒன்றுபடு தமிழுக்காகவே ஒன்றுபடுதல் வேண்டும்.
எனவே, இற்றைய சூழலில் தலைவரின் மரணம் தொடர்பான செய்திகளை நம்புவதை விட்டுவிட்டு இனி அடுத்த கட்ட நடவடிக்கைகளைச் சிந்திப்பதுவே நமது முதல் வேலையாக இருத்தல் வேண்டும். உலகத் தமிழர்களின் உள்ளத்திலும் உணர்வுகளிலும் உயிரிலும் கலந்திருக்கின்ற உண்மைத் தமிழ்மகன் விரைவில் வருவார் என நம்பிக்கையோடு காத்திருப்போம். விடிகின்ற நாளைய பொழுது நம்பிக்கை பொழுதாக, மலர எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.
ஒற்றைத் தமிழ்மகன் இங்கு உள்ளவரை
உள்ளத்தே அற்றைத் தமிழ்த்தாய் இங்கு ஆட்சி புரியும் வரை
எற்றைக்கும் எந்நிலையிலும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்