வியாழன், 13 நவம்பர், 2008

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டியதன் அவசியம் என்ன?

தெளிவு :


மொழி என்பதுஓர் இனத்தின் உயிர் நாடி, பண்பாட்டு அடையாளம், ஓர் இனத்தின் முகவரி. நம் மொழி நம்மைக் காட்டும். ஒருவருடைய பெயரைக் கேட்டதுமே அவர் என்ன இனம் என அடையாளப் படுத்துவதற்குத்தான் பெயர். ஆனால் இற்றைய நிலையில் பலர் புரியாத மொழிகளில் பெயர் வைப்பதையே பெருமையாக நினைக்கின்றனர். இதை விட வெட்கக் கேடானா செயல் ஒன்றுமில்லை. இன அடையாளம் இல்லாத நிலையில் வாழும் ஒருவன் உலகத்தில் மதிப்பிழந்து போய்விடுவான் என்பது வரலாற்று உண்மை. அவ்வகையில் நமது மொழியையும் பண்பாட்டையும் இழந்து விட்டு அடையாளம் இல்லாத இனமாக வாழ்வதைவிட இறப்பதே மேல். எனவே, நமது மொழியின் வரலாற்றுச் சிறப்பினையும் மாண்பினையும் உணர்ந்து நமது குழந்தைகளுக்கு நல்லதமிழ்ப்பெயரைச் சூட்டுங்கள்; நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்.

தமிழே தமிழரின் முகவரி

கருத்துகள் இல்லை: