திங்கள், 22 செப்டம்பர், 2008

தமிழின் எதிர்காலமும் தமிழர்களின் எதிர்காலமும்

ஐயம் : இந்நாட்டில் தமிழின் எதிர்காலமும் தமிழர்களின்
எதிர்காலமும் எப்படி இருக்கும் ?

தெளிவு :

தமிழின் எதிர்காலமும் தமிழனின் எதிர்காலமும் காலத்தைப் பொறுத்ததுதானே. தமிழனின் எதிர்காலம் குறித்து ஆருடம் சொல்வதல்ல என் வேலை. எப்படி இருக்கவேண்டும் என வியூகங்கள் வகுப்பதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும். சதா பாறையின் மீது மோதிச் சிதறும் கடலைகள் போலத்தான் காலங்கள் தோறும் நம்மை நோக்கிப் பிரச்சனைகளும் சவால்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். இருக்கட்டுமே. எந்த சவால்களையும் எதிர்நோக்க, வெற்றி கொள்ள என்ன இல்லை நமக்கு. ஆண்ட பரம்படை நாம், ஒரு நீண்ட பாரம்பரியத்தின், சிந்தனை மரபின் இன்றைய புதல்வர்கள் நாம். அறிவு இருக்கிறது நம்மிடம்; ஆற்றல் இருக்கிறது நம்மிடம்; உழைப்பு இருக்கிறது நம்மிடம். உண்மை இருக்கிறது நம்மிடம். யாரோ உருவாக்கி நம் கையில் திணிப்பதல்ல எதிர்காலம். நாமே உருவாக்கிக் கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது நமது எதிர்காலம். நாளைய சமூக, அரசியல், கல்வி, பொருளாதாரத் துறைகளில் முன்னேற்றம் காண இன்றே நாம் வியூகங்களை வகுப்போம். அந்தந்தத் துறை அறிஞர்களை அழைத்துப் பேசுவோம். செயலாற்றுவோம்; அதன் பயன்கள் கடைசித் தமிழனை சென்றடைஅய் வழிகாண்போம். நாளைய சூரியன் பேரொளியாகத்தான் இருப்பான். விழி திறந்திருப்பவனுக்குத் தானே “விடியல்” என்பது.

நன்றி:- செம்பருத்தி

2 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நன்கு உள்ளது ஐயா.... சிறப்பாக தொடருங்கள்... வாழ்த்த எனக்கு வயதில்லை...

பெயரில்லா சொன்னது…

வணக்கம் வாழ்க வளத்துடன்

தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

தமிழால் ஒன்றுபடுவோம்
தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி

அன்புடன்
கோவி. மதிவரன்