சனி, 20 செப்டம்பர், 2008

தமிழ்த் தெளிவு 2

ஐயம் : ஐயா வணக்கம். தமிழில் பிறமொழிச் சொல் கலந்தால்தான் நல்லது
என்றும் அது மொழி வளர்ச்சிக்கு உகந்தது என்று பலர்
ருதுகின்றனர். உங்கள் கருத்து என்ன ?



தெளிவு :

சொல் வளம் இல்லாத மொழிகள் பிறமொழிகளிலிருந்து கடன் பெறலாம். ஆனால் சொல்வளமும் உருவாக்கத் திறமும் கொண்ட உயர்தனிச் செம்மொழியான தமிழ் போன்ற மொழிகள் பிறமொழிகள் கலந்தால் வளரும் என்று கூறுவது பேதமையாகும். பிறமொழி கலவையினால் தமிழ் வளரும் என்பது உண்மையானால் இந்தியா முழுமையிலும் விளங்கிய தமிழ் இன்று தேய்ந்து சுருங்கி தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படுவது ஏன் என்பதை ஆராய வேண்டும். மொழியியலாளர்கள் ஒருமொழியோடு பிறிதொரு மொழி கலந்தால் புதிய மொழி ஒன்று உருவாகிவிடும் என்கின்றனர். எனவே, இருக்கின்ற தமிழையும் இல்லாது செய்கின்ற சூழ்நிலை உருவாகுமே அல்லாமல் மொழிவளரும் என்று சொல்லுதல் பொருந்தாது.


நன்றி:- தமிழ்நெறி

கருத்துகள் இல்லை: